கட்டில் கிழவன்
----------------------------
கனத்த மீசை முறுக்கிக்கிட்டு
களத்து மேட்டில் நின்றதுவும்
ஒரு மூடை நெல்லை
உருட்டித் தூக்கியதும்
வண்டி கட்டிச் சந்தையிலே
வாய்ச் சவடால் பேசியதும்
மீன் சோறு சாப்பிட்டு
மேனியிலே சாஞ்சதுவும்
கட்டில் கிழவனின்
கண்களிலே முட்டும்
----------------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக