கலையும் கலையும்
-----------------------------------
தெரு ஓவியத்தின் மீது
வீசப்படும் காசுகளால்
உருக் குலையும்
ஓவியத்தின் அழகு
முச்சந்தி சிலையின் மீது
உட்காரும் காகத்தால்
எச்சில் படும்
சிலையின் அழகு
வரையாமல் செதுக்காமல்
இருந்திருக் கலாம்
பசி மட்டும் இல்லையென்றால்
------------------------------------------------------நாகேந்திர பாரதி
கலக்கல்... ரொம்ப ஸிம்பில அடிக்கிறீங்க.
பதிலளிநீக்கு